நாகர்கோவில் சரல் ஆசாரிவிளை ஜவகர் காலனியைச் சேர்ந்தவர் செல்வமுத்து (வயது 28). இவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 5 ஆண்டுகளாக கப்பலில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நண்பரின் திருமணத்திற்காக அவர் சொந்த ஊருக்கு வந்தார்.
இதற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு வரவேற்பு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு வரவேற்பு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் செல்வமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக